Wednesday, 3 May 2017

“காதல் என்பது எது”

“ஆன்மா என்பது எது’’ எனக் கேட்கிறாய்...
“பெரும் காதலின் பெருவெளியில் தனித்து நிறைந்து
பரந்துக் கிடக்கும் இரகசியத்தின் பிம்பம்” என்கிறேன்...
“காதல் என்பது எது” என்கிறாய்...
அறுதிசை நீங்கிய பரமாணுவின் சூட்சுமமாய் கசியும்
மூலத்தின் யதார்த்தம்” என்கிறேன்...
“வாழ்க்கை என்பது எது” என்று கேட்கிறாய்...
ஸ்தூலத்தின் பிரிவோன்றிலும் ஆன்மாவில் புன்னகை தரும்
பெரும் காதலின் நினைவுக் குறிப்புக்கள்” என்கிறேன்
‘‘மரணம் என்பது எது’’ என்கிறாய்...
“வாழ்ந்து முடித்த ஆன்மாக்களின் கொண்டாட்டம்” என்கிறேன்..

No comments:

Post a Comment