அறியா வயது என
அடக்கி வைத்த நாட்களில்
இவனுக்குள் பெரும் கனவுகள் இருந்தன..
சில பட்டாம் பூச்சிகள்
பின்னே ஓடும் இவன் கால்கள்,
பறக்கும் பரவசத்தில் சிறகாய் தோன்றும்....
இவன் வளர்த்த சில மீன் குஞ்சுகளோடு
கதை பேசி கனவுகள் வளர்க்கும்
பல நாட்கள் இருந்தது....
இவனுக்கு என சில செடிகள் இருந்தன....
இவனுக்கு என சில மரங்கள் இருந்தன...
இவனுக்கு என சில பட்டாம் பூச்சிகள் இருந்தன...
இவன் உளறல்களையும கனவுகளையும்
அவை மட்டும் அறிந்திருந்தன...
இவன் கதைகளை அவைகள் மட்டுமே கேட்டு இருந்தன...
இவனுக்கான அந்த உலகத்தில்
சந்தோஷமாய் குதுகலித்து வாழ்ந்த இளவரசன் இவன்...
ஓட்டை கூரை மறைத்த,
பூச்சு முடிக்கா சுவரொன்றில் கால்கள் பதித்து,
தரையில் உறங்கி
இவன் முணுமுணுத்த வார்த்தைகள்
பின்னொருநாளில் கவிதைகளாய் மாறி பறந்தன...
குப்பி விளக்கின் மங்கள் ஒளியில்
மின்னும் இவன் கண்கள்....
ஒரு கனவின் வலிமையை
பின்பொருநாள் சொல்லும்.....
சேறு படிந்த இவன் வெற்றுக் கால்களை
கழுவும் தோறும்
சந்தோஷங்கள் வழிந்தோடிக்கொண்டிருந்தன...
மிஸ்பாஹுல்ஹக்.
31 January 2016




