Saturday, 13 May 2017

இன்னும் எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன்...!!!

வெறுமையின் ஆழத்துள்
உடைந்து நொருங்கிய கண்ணாடி
பெரும் மௌனத்தின்
விம்பத்தை யாரிடம் காட்டும்....
காதலின் மெல்லிய ஆசுவாசம்,
தூரலைபோல சிதறும் உன் முத்தங்கள்,
வர்ணம் கலைந்த ஒரு கனா...
தூக்கம் துறந்த தனித்த காத்திருப்பு...
எழுத மறந்த நாட்குறிப்பின் பக்கங்கள்...
விரகம் நீர்த்த மெல்லிய அனைப்பு...
உருகி வழிந்து ஆடிக்களிக்கும் ஒரு மெழுகுவர்த்தி..
கசிந்து வழியும் மரணத்தின் நெடி...
மனதை நெருடும் எழுதப்படாத கவிதைகள்..
தூரத்தில் கேட்கும் உன் மெல்லிய விசும்பல்...
எல்லாம் மறையும் இந்த
யாமத்தில் வழியும் ஆகிரியில்
இன்னும் எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன்...!!!

No comments:

Post a Comment