நிஷ்டை களைந்த இரவின் ஓரத்தில்
வெறுமையாய் கரைகிறது ஞானம்!!!
வெறுமையாய் கரைகிறது ஞானம்!!!
“ஆழ்ந்து படர்ந்த பேரமைதி...
ஆசைகள் கடந்த மோட்சம்...
பெருநெறி செலுத்திய பாதம்...
ஞானம் தெளிந்த மௌனம்...
மருள் அகன்ற பாதை...
நேசத்தில் குழைந்த வார்த்தைகள்...
அன்பின் சூட்சுமம்...”
ஆசைகள் கடந்த மோட்சம்...
பெருநெறி செலுத்திய பாதம்...
ஞானம் தெளிந்த மௌனம்...
மருள் அகன்ற பாதை...
நேசத்தில் குழைந்த வார்த்தைகள்...
அன்பின் சூட்சுமம்...”
இப்படி ஓரு மழை இரவில்
ஒரு நிஷ்டைக்குள் வாசியடைந்தது
அந்த உன்னத ஆன்மா!!!
ஒரு நிஷ்டைக்குள் வாசியடைந்தது
அந்த உன்னத ஆன்மா!!!
"குருதியில் நீர்த்த தாகம்..
வார்த்தைகள் சுமக்கும் வக்கிரம்..
மலம் சுமக்கும் இதயங்கள்..
இருள்படிந்த கண்கள்..
மமதை செறிந்த ஞானம்...
பேரிரைச்சல் நிறைந்த அசுவத்தம்..
குரோதங்களின் சூட்சுமம்...
அத்தியயனங்கள் மறந்த உதடுகள்.."
வார்த்தைகள் சுமக்கும் வக்கிரம்..
மலம் சுமக்கும் இதயங்கள்..
இருள்படிந்த கண்கள்..
மமதை செறிந்த ஞானம்...
பேரிரைச்சல் நிறைந்த அசுவத்தம்..
குரோதங்களின் சூட்சுமம்...
அத்தியயனங்கள் மறந்த உதடுகள்.."
இப்படி, இன்னொரு இரவில்
"துறவை" போர்த்திக் கொண்டது பேரவம்...
"துறவை" போர்த்திக் கொண்டது பேரவம்...
அசப்பியம் ஓதும்
அக்கனின் ஓலத்தில்
நிஷ்டை களைந்து விழித்துக் கொண்டது
இந்த இரவு...
அமைதி கரைந்த உன்னத இரவில்
கசிந்துக் கொண்டிருக்கிறது
பெரும் சாபத்தின் நீட்சி...
நிஷ்டை களைந்து விழித்துக் கொண்டது
இந்த இரவு...
அமைதி கரைந்த உன்னத இரவில்
கசிந்துக் கொண்டிருக்கிறது
பெரும் சாபத்தின் நீட்சி...

No comments:
Post a Comment