காதலின் பெருவெடிப்பில் சிதறி கிடைத்தது இந்த பிரபஞ்சத்தின் துகள்கள்...
எந்த பெருவெடிப்பில் நிகழ்ந்தது இந்த உன்னத காதல்
காதலின் கால சூட்சுமம் எங்கிருந்து எழுதப்பட்டது என் யஷோதரா....
முடிவிலிளிகளில் இருந்து நீடிக்கிறது நம் காதலின் இரவு... அணுவை போல பிளவுறும் கணங்கள் யுகம் கடந்த ஒரு பகலை நோக்கி இந்த இரவை நீண்டதாய் நகர்த்தி கொண்டிருக்கிறது...
காதலின் உன்மத்தத்தில் சிந்திய நம் விசும்பல்கள் சிதறி இந்த இருண்ட வானமெங்கும் நட்சத்திரங்களாய் தெறித்ததை உன் கவிதை மட்டும் சொல்லிக்கொண்டது என் யஷோதரா...
அண்டங்கள் இயங்கும் மூலத்தின் பேரிசை இப்போது, உனக்கும் எனக்கும் மெல்ல கேட்கிறது...
பிரபஞ்சம் கடந்த காதலின் பெருவெளியில் நீ என் பேரிசையாகிறாய் நான் உன் கவிதையாகிறேன்...