நீ எதிர்பாராத நிமிடமொன்றில்
நான் மாண்ட செய்தி உன்னை வந்தடையக்கூடும்...
நான் மாண்ட செய்தி உன்னை வந்தடையக்கூடும்...
அதிர்ச்சியின் உச்சத்தில் நீ உறைந்துபோகும்
அந்த கணம்,
சடுதியாய் வந்த போதும்..
ஒவ்வொரு நாழிகையும் நான் உணர,
மெதுவாய் எனக்குள்ளே நிகழ்ந்துவந்த
முகாரி இது...
அதன் ஆரோகணத்தின் முடிவிலியிது…
அந்த கணம்,
சடுதியாய் வந்த போதும்..
ஒவ்வொரு நாழிகையும் நான் உணர,
மெதுவாய் எனக்குள்ளே நிகழ்ந்துவந்த
முகாரி இது...
அதன் ஆரோகணத்தின் முடிவிலியிது…
என் காட்சிப் பிழைகளை
சரி செய்துகொள்ள அவகாசம் இல்லா கணமொன்றில்,
இந்த தொடக்கத்தில்
என்னை முடித்துக்கொள்கிறேன்.
காலத்தின் சூட்சுமம் இல்லா
பெரு வெளியொன்றில் பறக்க முனைகிறேன்...
சரி செய்துகொள்ள அவகாசம் இல்லா கணமொன்றில்,
இந்த தொடக்கத்தில்
என்னை முடித்துக்கொள்கிறேன்.
காலத்தின் சூட்சுமம் இல்லா
பெரு வெளியொன்றில் பறக்க முனைகிறேன்...
மேய்ப்பு செழித்த பசுமைகளில்
இடையனை மறந்து விட்ட ஆடுபோல...
மாயைகளில் உழன்று திரிகிறேன்....
என் பட்டிக்கு அவன் என்ன அழைத்துப் போக
தேடிவரும் அஸ்தமன நேரமிது....
இடையனை மறந்து விட்ட ஆடுபோல...
மாயைகளில் உழன்று திரிகிறேன்....
என் பட்டிக்கு அவன் என்ன அழைத்துப் போக
தேடிவரும் அஸ்தமன நேரமிது....
என் கைகளில் கருமை படர்ந்திருக்கிறது...
என் கண்களில் வெறுமை நிறைந்திருக்கிறது...
என் உதடுகள் வறண்டு கிடக்கிறது....
பாவங்களின் பெரும் சுமையை
ஒரு சிலுவையைப் போல என் தோள்கள் சுமந்திருக்கிறது...
என் கண்களில் வெறுமை நிறைந்திருக்கிறது...
என் உதடுகள் வறண்டு கிடக்கிறது....
பாவங்களின் பெரும் சுமையை
ஒரு சிலுவையைப் போல என் தோள்கள் சுமந்திருக்கிறது...
இப்போது நான் இழந்து,
பின் மறந்து விட்ட என் புன்னகையை
தேடிக் கொண்டிருக்கிறேன்.
என் மரணத்தை நான் அலங்கரிக்க
அதை உடுத்தியாக வேண்டும்...
உன்னிடம் அது இருந்தால்
என்னிடம் கொடுத்து விடு...
என்னை நான் அலங்கரித்தாக வேண்டும்...
பின் மறந்து விட்ட என் புன்னகையை
தேடிக் கொண்டிருக்கிறேன்.
என் மரணத்தை நான் அலங்கரிக்க
அதை உடுத்தியாக வேண்டும்...
உன்னிடம் அது இருந்தால்
என்னிடம் கொடுத்து விடு...
என்னை நான் அலங்கரித்தாக வேண்டும்...
என் வெற்று மதுக்கிண்ணத்தின் கீழே,
ஒரு ரோஜா சருகாகிக் கிடக்கிறது...
வண்ணம் நிறைந்த ஒரு பாட்டம் பூச்சி செத்துக் கிடக்கிறது
பின், ஒரு கருப்பு வெள்ளை கனவில்
நான் மயக்கமுறுகிறேன்....
ஒரு ரோஜா சருகாகிக் கிடக்கிறது...
வண்ணம் நிறைந்த ஒரு பாட்டம் பூச்சி செத்துக் கிடக்கிறது
பின், ஒரு கருப்பு வெள்ளை கனவில்
நான் மயக்கமுறுகிறேன்....
நிம்மதியாய் நான் உறங்கிப் போன பின்பு
என் முகத்தை திறந்து பார்க்கவோ,
திறந்து காட்டவோ அனுமதி மறுக்கப்பட்டிருக்கும்...
வெள்ளை துணியில் என்முகத்தை
இறுக முடிக்கிடப்பதை நான் விரும்புகிறேன்...
என் முகத்தை திறந்து பார்க்கவோ,
திறந்து காட்டவோ அனுமதி மறுக்கப்பட்டிருக்கும்...
வெள்ளை துணியில் என்முகத்தை
இறுக முடிக்கிடப்பதை நான் விரும்புகிறேன்...
உன் கண்ணீரில் என் மௌனப்”புன்னகையை”
நீ காண்பதை அப்போது நான் விரும்பவில்லை...
எப்போதும் போல இப்போதும்
நான் தனிமையில் இருக்கிறேன்....
என் கொண்டாட்டத்தில் நீங்கள்
அழுதுக் கிடப்பீர்கள்....
நீ காண்பதை அப்போது நான் விரும்பவில்லை...
எப்போதும் போல இப்போதும்
நான் தனிமையில் இருக்கிறேன்....
என் கொண்டாட்டத்தில் நீங்கள்
அழுதுக் கிடப்பீர்கள்....
என் பெயரையும் சில நினைவுகளையும்
மட்டும் இங்கே வைத்து...
என் வெறிச்சோடிய புன்னகைகளை
இங்கே பரவவிட்டிருக்கிறேன்....
உன் அழகான அந்த இதழ்களின்
ஒவ்வொரு புன்னகையிலும்
அது பரவசம் அடையும்...
மீண்டும் மீள இயலாதா இந்த இல்லாமையை விட்டு
நான் மீண்டு போன பின்பு....
மட்டும் இங்கே வைத்து...
என் வெறிச்சோடிய புன்னகைகளை
இங்கே பரவவிட்டிருக்கிறேன்....
உன் அழகான அந்த இதழ்களின்
ஒவ்வொரு புன்னகையிலும்
அது பரவசம் அடையும்...
மீண்டும் மீள இயலாதா இந்த இல்லாமையை விட்டு
நான் மீண்டு போன பின்பு....
