Monday, 24 April 2017

யாமினி!!!

யுகாதிவரை நீளும்
உன் அந்தகார இருளுக்குள்,
இன்னும் எத்துனை ரகஸ்யங்களை
பொதித்து வைத்திருக்கிறாய் யாமினி...
தனிமையை விட்டு வெளியேறிவிடுகின்ற
நேசங்களை சில கனவுகளைக் ஏவி
இறத்தலுக்கும் இருப்புக்குமிடையில் வதைக்கிறாய்...
"ஒற்றை கணத்தில் எத்தனை மரணத்தை
கடக்கிறது இந்த ஆன்மா"
சிவப்பு நிறத்தில் சில வார்த்தைகளை
இப்போது திரித்துக் கொண்டிருக்கிறேன்...
இந்த யாமம் தீருமுன் மௌனத்தை
தூக்கிலிட்டு விடுவேன்...
யாமினி!!!
உன் விசும்பலின் தொலைவில்
செத்துக் கிடக்கிறது இந்த அலத்தி...
அதன் கனவுகள் கருப்பாய்
எனக்குள் வழிந்துக் கொண்டிருக்கிறது...

No comments:

Post a Comment