Friday, 1 January 2016

‪தகம்.

கடும் கருமை கவ்விய
கங்குலின் விளிம்பில்
குவிந்திருந்தது ஒற்றைக் கவனம்....
திணைகள் அற்ற உன்
ஒற்றை முகம்,
பிரபஞ்சமாய் பிம்பம் எடுத்து
ஒரு அருவியாய் எனக்குள் புகுந்து
மெய்யுள் அடங்கிப் போனது....


No comments:

Post a Comment