Thursday, 27 August 2015

உன‌க்கான‌ வார்த்தைக‌ள்

மெதுவாய் செதுக்கிய‌
உன‌க்கான‌ வார்த்தைக‌ளை
என‌க்குள்ளே இன்னும் 
ப‌த்திர‌ப்ப‌டுத்தி வைத்திருக்கிறேன்....

ச‌ல‌னமில்லா
உன் பார்வையும் மௌன‌மும்
இவ‌ன் குள‌த்தில்
கல்லெறிந்துப் போன‌து...

என‌க்கு பிடித்த‌
அந்த‌ க‌ட‌ற்க‌ரையில்...
அந்த‌ மொட்டை மாடியில்...
ர‌யில் க‌த‌வோர‌ ப‌ய‌ண‌ங்க‌ளில்
என‌க்குள் நீ இசையானாய்...

மிருதுவாய் உன் இத‌ழ்க‌ள்
வாசிக்கும் புல்லாங்குழ‌லின்
துளைக‌ளில் சுவாசித்து
வாழ்கிற‌வ‌ன் யான்...

இன்னும் க‌ண‌க்கும்
என் இத‌ய‌த்தில்
உனக்கான வார்த்தைக‌ளை
பதுக்கிக் கொண்டு இருக்கிறேன்....

என் ம‌ர‌ணம் வ‌ரை
என் மௌன‌ங்க‌ளுக்குள்
அவை மௌனித்து இருக்கும்...

-மிஸ்பாஹுல் ஹக்-




No comments:

Post a Comment