Monday, 18 January 2016

ஒற்றை நாணயம்

மீற்க முடியா இடுக்கொன்றில்
இந்த சிறுவன் தொலைத்த
நாணயம் நீ....

இவனின் சிறிய உலகில்
சேர்த்துவைத்த பெரும் கனவுகள்
வாழ்ந்தது அந்த
ஒற்றை நாணயத்தில்...

என்றோ ஒரு நாள்
எவனோ ஒருவன் பெறக்கூடும்
அந்த ஒற்றை நாணயத்தை...
அவனுக்கு தெரிய போவதில்லை
ஒரு கனவு சிதைந்ததின் வலி....

ரகசியமாய் அவன் வடித்த
கண்ணீரோடு காய்ந்திருந்தது
அந்த நாணயத்தின் கனவு....

#மிஸ்பாஹுல்ஹக்

18th January 2016



No comments:

Post a Comment