Sunday, 24 January 2016

எனக்கான என் வானம்...

நிலா புன்னகைக்கும் ராத்திரியில்
சர்க்கரை மணல் பரந்த அந்த கடற்கரையில்
மல்லாக்க படுத்து.... 
தெளிந்த வானத்தில் சுயம் மறந்து....
செவியிரண்டில் அழுத்திய “ஹெட்செட்டில்”
ரஹ்மானின் இசையில் என்னை அழித்து
நட்சத்திரங்களில் பயணிப்பது தனி சுகம் எனக்கு....

ஒவ்வொரு காலையிலும்
பறக்க பறக்க ஓடி, முண்டியடித்து,
தொற்றிக் கொள்ளும் ரயில் கதவுகளில் பயணித்தபடி...
இதாமாய் இருக்கமாய தழுவும்
காற்றின் ஆசுவாசம் வாங்கி,
தெளிந்த அந்த நீலவானத்தையும்,
ஆங்காங்கே தங்கமீன்களாய் நீந்தி விளையாடும்
காலை மேகங்களையும் ரசிப்பது
உற்சாகம் தரும் எனக்கு....
பெரும் கனவுகள் வளர்க்கும் எனக்குள்....

வானத்தை ரசித்தலை தவிர,
அது தரும் கனவுகளை தவிர
எந்த பேதையின் அழகும்
போதை தந்ததில்லை எனக்கு.....

ஒவ்வொரு சோர்விலும்....
ஒரு தனிமையிலும்...
ஒவ்வொரு தோல்விகளிலும்...
ஒவ்வொரு விரக்தியிலும்...
என்னை தெளிய வைத்திருக்கிறது...
ஒரு கடற்கரையும்
விரிந்து பரந்த ஒரு வானமும்....

மேகங்களுக்குள்ளால் நான் பறக்கும் ஒவ்வொரு முறையும்
அதற்குள்ளே இருந்து விட தவிக்கும் மனது...
இந்த வானம் தரும் பரவசம்,
என்னை மறந்து ஒரு புன்னகையை உதிர்த்து விடும்...


மிஸ்பாஹுல் ஹக்

24th January 2016

No comments:

Post a Comment