என்னை தழுவி,ஸ்பரிசித்து ஆசுவாசப்படுத்தும்
ஒரு காற்றை தோழமை கொண்டிருக்கிறேன்...
எப்போதும் என் எல்லா உணர்வுகளையும் அந்த காற்றோடு மட்டுமே என்னால் சொல்லிக்கொள்ள முடிகிறது...
இரவுகள் தீரும் வரை அந்த காற்று சொல்லும் கதைகள் மெல்லிய விசும்பல்களாய்
என் உணர்வுகளுக்குள் விரவி நிற்கும்....
ஒரு காற்றை தோழமை கொண்டிருக்கிறேன்...
எப்போதும் என் எல்லா உணர்வுகளையும் அந்த காற்றோடு மட்டுமே என்னால் சொல்லிக்கொள்ள முடிகிறது...
இரவுகள் தீரும் வரை அந்த காற்று சொல்லும் கதைகள் மெல்லிய விசும்பல்களாய்
என் உணர்வுகளுக்குள் விரவி நிற்கும்....
விரல்களில் அப்பிக்கொள்ளும் காய்ந்த என் கண்ணீரின் வாசனையை மெல்லிய தீண்டலில் கண்ணீரை காயவைக்கும் மாயம் கொண்ட அந்த கற்றிடம் நான் உணர்கிறேன்,
இந்த கங்குலின் கருமைக்கும் எனக்கும் என்ன உறவோ அதே உறவு தான் அந்த கற்றுக்கும் விடியலுக்குமானது, ஒவ்வொரு விடியல்களிலும் பூக்களின் இதழ் கழுவும் பனித்துளிகள் எங்கிருந்து வருகின்றன என்பதை பற்றியும் எங்கே அவை போகின்றன என்பதை பற்றியும் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்.
பூவிதழ் போல மெல்லிய இதயம் ஒன்று இருக்கிறது.
எனக்கு பனித்துளிகள் வேண்டும்.
எனக்கு பனித்துளிகள் வேண்டும்.
No comments:
Post a Comment