Saturday, 26 March 2016

ஒற்றைச் சுடர்




பெரும் மௌனம் படர்ந்த அந்த
கங்குலில்,
ஒற்றைச் சுடர் ஆடிக் களித்துக்கொடிருந்தது
ஒரு குப்பி விளக்கின் உச்சியில்

மாதமொரு பௌர்ணமியில்
ஓட்டைக் கூரையில் கசியும்
நிலவின் ஒளியைத்தவிர
எந்த பரவசமும் இல்லை
அந்த குடிலுக்கு...

ஒற்றை சுடர் எங்கிருந்து வந்தது...
ஒரு பிரபஞ்சம் அடைந்துக்கிடக்கும்
இந்த குடிலின் வாயிலில்
அமர்ந்திருக்கிறது சுவர்க்கம்....

மெதுவாய் இந்த குடிலில் பரவும்
இந்த தங்க ஒளியில்
உன் புன்னகையும்
உன் கண்ணீரும்
உன் மௌனமும்
உன் கனவுகளும்
மெதுவாய் மங்கியே போகிறது....

குப்பிவிளக்கின் உச்சியில்
நெகிழ்ந்தாடும் சுடரின் மேலே
பிடித்திருந்த வெள்ளை காகிதத்தில்
படியவைத்த கரும் புகையில்
வளர்ந்தது கருமையின் மீது ஒரு காதலும்
ஒரு கவிஞனின் கனவும்...

மிஸ்பாஹுல்ஹக்.

No comments:

Post a Comment