Monday, 14 March 2016

நாற்றம் பரவிய சமர்களத்தில்

எப்போதும் 
சமரசங்கள் இல்லாத
சமர் இருக்கும்
களமிது....

வெண்ணிற புரவியில் களிப்புறும்
இந்த கருமை வீரனின்
தோல்வி
இங்கே நிச்சயிக்கப்பட்டது.

எதிரியின் வெற்றியும்
வீரனின் குதுகலிப்பும்
ஒற்றைச் சொல்லின் இரட்டை அர்த்தங்கள்,
ஒரு மாய சுயத்தின் பிம்பங்கள்...

பிணங்கள் பரந்து குவிந்து
நாற்றம் பரவிய இந்த
சமர்களத்தில்
இந்த கோழை
ஒரு மதுக்கின்னத்தை தேடியலைகிறான்....

மிஸ்பாஹுல்ஹக்



No comments:

Post a Comment