ஒவ்வொரு வார்த்தைக்கும்
பெரும் பிம்பங்கள் சமைத்து
பயங்களை பதித்து வைத்திருக்கின்றீர்கள்...
சில போது அவை
ஒவ்வொன்றாய் குதித்து...
பிம்பங்களை இழுத்து வருகின்றது இங்கே...
கருப்பு வெள்ளை கற்பனைகளுக்குள்
வசிக்கும் சில பூனைகள்
பூக்கும் சில வார்த்தைகளை
அவ்வப்போது மென்று தின்று
கராவித்திரிகிறது கற்பனைகளின்
மௌனங்களை குலைத்தபடி...
ஆடைகள் கலைந்தது,
வெறும் சதையாய் காட்டிய வார்த்தைகள் தான்
பின்பு உணர்வுகள் தூவி, இச்சைகள் மூட்டி
என் விரல்களை இழுத்துவந்து
கிளர்ச்சி மூட்டி வருட வைத்தது....
எதிரிகளின் துப்பாக்கிகளில் இருந்து
பாய்ந்து வந்து
வெடித்து சிதறியது சில வார்த்தைகள்...
ஒரு குண்டை விட துளைத்திருந்தது
சில உணர்வுகளை..
வன்மம் மிக்க வார்த்தைகளை
அள்ளி தூவி வைத்திருக்கிறீர்கள்....
முள்ளென உறுத்தி
உறக்கங்களை கலைத்துக்கொண்டு
அகோரப்புன்னகையை
எரிகிறது என் முகத்தில்...
மிஸ்பாஹுல்ஹக்
பெரும் பிம்பங்கள் சமைத்து
பயங்களை பதித்து வைத்திருக்கின்றீர்கள்...
சில போது அவை
ஒவ்வொன்றாய் குதித்து...
பிம்பங்களை இழுத்து வருகின்றது இங்கே...
கருப்பு வெள்ளை கற்பனைகளுக்குள்
வசிக்கும் சில பூனைகள்
பூக்கும் சில வார்த்தைகளை
அவ்வப்போது மென்று தின்று
கராவித்திரிகிறது கற்பனைகளின்
மௌனங்களை குலைத்தபடி...
ஆடைகள் கலைந்தது,
வெறும் சதையாய் காட்டிய வார்த்தைகள் தான்
பின்பு உணர்வுகள் தூவி, இச்சைகள் மூட்டி
என் விரல்களை இழுத்துவந்து
கிளர்ச்சி மூட்டி வருட வைத்தது....
எதிரிகளின் துப்பாக்கிகளில் இருந்து
பாய்ந்து வந்து
வெடித்து சிதறியது சில வார்த்தைகள்...
ஒரு குண்டை விட துளைத்திருந்தது
சில உணர்வுகளை..
வன்மம் மிக்க வார்த்தைகளை
அள்ளி தூவி வைத்திருக்கிறீர்கள்....
முள்ளென உறுத்தி
உறக்கங்களை கலைத்துக்கொண்டு
அகோரப்புன்னகையை
எரிகிறது என் முகத்தில்...
மிஸ்பாஹுல்ஹக்

No comments:
Post a Comment