Friday, 1 April 2016

என் ரோஜா

எனக்கும் ஒரு ஷம்சைப்போல்
என் உயிராய் என் எல்லாமுமாய்
ஆன நண்பரே...
என்னை விட்டு நீங்கிப் போனதேனோ.....

இங்கே வெறும் ஜடமாய்
கிடந்தது அழுது தவிக்கிறேன்....
என் கலங்களின் ஒவ்வொரு அணுவிலும்
அழுது வடிக்கிறேன்...

இந்த போக்கிரியை,
போக்கற்று கிடந்தவனை,
அள்ளி அனைத்து ஆக்கிவைத்த
அந்த கரங்கள்,
இனி பற்ற முடியா ஒரு தொலைவில்...
இனி எந்த விரல்கள்
இவன் கண்ணீரை துடைக்கும்.....

ஒரு ஒற்றை இடைவெளி
இந்த  வாழ்க்கையை  பாழாக்கி விடுகிறது
என் எல்லா சுவாரஸ்யங்களும்
என் வெறுமைக்குள் இருண்டு போகிறது...

இந்த அண்டம் வெடிக்க
கத்தி கதற முனைகிறது என் ஆன்மா...
இந்த நெஞ்சு நெருக்கும் வலியை
வெறும் கண்ணீரில் எப்படி மறைப்பது...
ஒரு கல்லில் இந்த சிலையை
செதுக்கிய கரங்கள்...
அதன் கரங்களை பற்றிகொண்டு
போயிருந்திருக்கலாம்...
தனிமையில் என்ன செய்யும்
வெறும் பலமிழந்த சிலை....

எனக்கும் ஒரு ஷம்சைப்போல்
என் உயிராய் என் எல்லாமுமாய்
ஆன நண்பரே...
என்னை விட்டு நீங்கிப் போனதேனோ.....
என் ஓவியங்களின்
இன்றோடு வண்ணமிழந்து போகிறது....
என் எழுத்துக்களை
கண்ணீரும் வலியும்
இந்த தனிமை நிறைந்த  ஏகாந்தத்திற்கு எடுத்து வருகிறது...

இனி எப்போது பார்ப்பேன்

என் ரோஜாவை...



No comments:

Post a Comment