Wednesday, 4 January 2017

அவன்_எனும்_கவிதை.




காதல் நீர்த்த சதைகளின் மீதான
காமத்தை பற்றி அந்த இரவில் அவன்
பேசிக்கொண்டே இருந்தான்...

மேகங்கள் நட்சத்திரங்களை மறைத்து வைத்த
பிணிகொண்டு நீளும் யாமமது...

என் பருத்து செழித்த முலைகளின் மீதும்,
ஒரு யுகத்தின் தாகம் தீர்க்கும் இதழ்களின் மீதும்
படியாத பார்வை....
உன்மத்தமான வெறுமைக்குள் படர்ந்திருந்த
ஆன்மாவை, கண்களினூடே
கரைத்துக் கொண்டிருந்தது....

முல்லை கங்குலென இருண்டு கிடக்கும்
மனமெங்கும், படர்ந்து பறக்கும்
மின்மினிகளை போல
ஒரு ரம்மியமான காதல் அவன் மீது
ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறது....

நிலவில் இருந்து வந்தவன் அவன்...
செட்னாவிலிருந்து கனவுகளில் வந்தவள் நான்..

ஒரு பெண்ணின் ஆன்மாவை
ஸ்பரிசிக்கும் வித்தை தெரிந்தவன் அவன்.

அவன் பார்வையும், வார்த்தையும்
மாயைகளில் வார்க்கப்பட்டவை

நீண்ட பெரும் கதைகளில் என்னை
சிறை வைத்திருக்கிறான்....

இது அவன் எழுதிக் கொண்டிருக்கும் கவிதை...
அவன் எனும் ஏகாந்தத்தில் இருந்து
விழுந்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள்...
இப்போது என் வாசிப்பின் பிரங்ஞையை முடித்துக்கொண்டு
காதல் எனும் வெறுமையில் வழிந்துக் கொண்டிருக்கிறேன்...

#மிஸ்பாஹுல்ஹக்.


No comments:

Post a Comment