♪
ஒரு யுகம் தாண்டிய
கவிதைக்கான எழுத்துக்களை
சேகரித்து கொண்டிருக்கிறான் அவன்.
கவிதைக்கான எழுத்துக்களை
சேகரித்து கொண்டிருக்கிறான் அவன்.
ஒவ்வொரு எழுத்துக்களும்
அவனால் நிர்வாணப் படுத்தப்படுகிறது,
இப்போது அவை,
அடாயளங்களும் மதங்களும் இன்றி
வெறும் எழுத்துக்களாகவே
தனித்து நிற்கின்றன...
அவனால் நிர்வாணப் படுத்தப்படுகிறது,
இப்போது அவை,
அடாயளங்களும் மதங்களும் இன்றி
வெறும் எழுத்துக்களாகவே
தனித்து நிற்கின்றன...
ஆடைகளால் அடையாளம் கொடுக்கப்பட்ட
பாலினம் இன்றி சுதந்திரமாக சுத்தமாக
கிடந்தன அவைகள்...
பாலினம் இன்றி சுதந்திரமாக சுத்தமாக
கிடந்தன அவைகள்...
நானும், அவனும்
ஒவ்வொரு எழுத்துக்களாய் சுமந்து
கண்ணீரின் முடிவுகளில்
தொடங்கிய ஒரு நதியில்
அவைகளை கழுவி நிறங்களை
போக்கிக் கொண்டிருக்கிறோம்...
ஒவ்வொரு எழுத்துக்களாய் சுமந்து
கண்ணீரின் முடிவுகளில்
தொடங்கிய ஒரு நதியில்
அவைகளை கழுவி நிறங்களை
போக்கிக் கொண்டிருக்கிறோம்...
பேதங்கள் களைந்த எழுத்துக்களை
முத்துக்களை போல
சேகரித்துக் கொண்டிருக்கிறோம்..
முத்துக்களை போல
சேகரித்துக் கொண்டிருக்கிறோம்..
அந்த முத்துக்களின் மீது,
அன்பையும், நேசத்தையும், காதலையும்
செதுக்கி எனக்குள் பதித்து விடுகிறான்
அவன்.
அன்பையும், நேசத்தையும், காதலையும்
செதுக்கி எனக்குள் பதித்து விடுகிறான்
அவன்.
இப்போது அன்பின் யுகத்தை தேடி
என்னை நான் கடந்துக் கொண்டிருக்கிறேன்.
என்னை நான் கடந்துக் கொண்டிருக்கிறேன்.

No comments:
Post a Comment