Friday, 20 May 2016

என் இருளை கொன்று தின்ற மெழுகுவர்த்தி

என் இருளை கொன்று தின்ற
மெழுகுவர்த்தி
சில கனவுகளில்
வழிந்தொழுகியது...

எங்கிருந்தோ வந்த
சில எழுத்துக்கள்
வார்த்தைகளாய் மாற மறுத்து,
மெழுகுவர்த்தியால்
செத்த இருளில் மறைந்து கொண்டது...

ஒரு புன்னகையில் நாம்
மறைத்துக்கொண்ட
நம் காதலை,
எழுதாமல் நான் விட்டுப்போன
என் டயரியின் பக்கங்கள்
இந்த நிசியில்
கிசுகிசுத்துக் கொள்கின்றன...

இந்த மெழுகுவர்த்தியை
எனக்கு பிடிப்பதில்லை...
சட்டென எரிந்து மடிந்த
தீக்குச்சியை பிடிக்கும் எனக்கு...
என் இருளை மீட்டிக்கொள்ள
இங்கே காத்திருக்கிறேன்
இந்த சர்பங்களின்
நாவுகளை ரசித்தபடி...

என் இதழ்கள்
தொடுகின்ற எல்லா
புல்லாங்குழல்களும்
முகாரியை மட்டும் இசைக்கிறது...

மிஸ்பாஹுல்ஹக்

No comments:

Post a Comment