Thursday, 11 December 2014

செத்துக் கிடக்கிறது இதயம்.


செத்துக் கிடக்கிறது
இதயம்...
உக்கிப்போகும் முன்பு...
மீண்டும் உயிர் கொடு...

மிருதுவாய் உன் விரல்கள்..
மெதுவாய் ஸ்பரசிக்க‌
சிலிர்த்து எழும்
மீண்டும் இதயம்...

முக்திப் பெறா
இவன் தவத்தின்
முடிவிலியில்
உத்திக்கும் சூரியன்...
நிரந்தர இரவில்
இவன்,
கனவின் அருவியில்
உறங்கிக் குளிக்கிரான்..

எல்லா ஆரம்பமும்
ஒரு முடிவில் தொடங்கும்...
எங்கே இதை முடிப்பது..
எதில் ஆரம்பிப்பது...
இந்த வக்ர ராகத்தை...
மிஸ்பாஹுல் ஹக்

No comments:

Post a Comment