Monday, 22 December 2014

நேசம் தேடிய‌ பயணம்

அமைதியாய்
சிறகுகள் விரிக்கும்
இந்த பறவை,
அதன் வழியை தேடி...

கண்கள் மூடி,
சுகந்தமாய் வீசும்
காற்றின் ஆசுவாசம் வாங்கி
பாதை புரியாமல் பறக்கும்..

பூக்கள் மலிந்த‌
சோலைகளில், அது மயங்கி
விழுந்து கிடக்கும்...
அதன் நேசம் தேடிய‌
பயணம் மறந்து...

வார்த்தைகளில் வரம்
கிடைத்த அதற்கு...
உணர்வுகளின்
மொழி புரியும்...

செவியில் ராகம் பாடும்
அதன் மெல்லிய குரல்
உறக்கம் தொலைத்த‌
சில விழிகளுக்கு
இதமாய் தோன்றும்...

இருந்தும்...
அதன் குரல், சில‌
ஞானிகளின் தவத்தை
களைக்கும்...

-மிஸ்பாஹுல் ஹக்-

No comments:

Post a Comment