விடுகதைகள் சுமந்து..
ஒரு அந்தகாரத்தின் ஓரமாய்
நடந்துச் செல்கின்றேன்..
ஒவ்வொரு மூச்சும்
பெறும் கணமாய் உள்ளிறங்கி
பரவும் திசைதோறும்
சிதைத்து சின்னாபின்னப்படுத்தும்
காட்சிகளின் மாயை
கண்களின் பிழைகள் அல்லவே
பின் கண்களை
பிடிங்கி எறிய சாபங்கள் எதற்காக..
சிவந்து பழுத்த
பொய் மரக் கணிகளை
சுவைத்து பின்
வார்த்தைகள் கள்ளி முற்களாய்
தெறித்துக் கொள்ளும்..
புழுக்கள் நெழியும்
பிணங்கள் உறங்கும்
நிலத்தின் அடியில்
நீயும் பதுங்கு..
மௌனங்களுக்குள்ளும்
சில உண்மைகள்
இன்னும் உறங்கும்....
மிஸ்பாஹுல் ஹக்

No comments:
Post a Comment